×

நிலுவை ஊதியம் வழங்க கோரி புதுச்சேரி போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்

காரைக்கால், செப்.19: நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்க கோரி, காரைக்காலில் பி.ஆர்.டி.சி (புதுச்சேரி அரசு போக்குவரத்தக்கழகம்) ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.
நிலுவையில் உள்ள 3 மாதங்களுக்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஊதியத்தை 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும். இதுவரை வழங்கப்படாத தீபாவளி போனசை வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரியில் நேற்று முன்தினம் மாலை முதல் பி.ஆர்.டி.சி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, காரைக்காலில் இயங்கும், புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் ஊழியர்கள், காரைக்கால் மதகடியில் உள்ள அரசு போக்குவரத்துக்கழக பணிமணை கிளை அலுவலக வாயிலில், ஊழியர் சங்கத் தலைவர் சுப்புராஜ் தலைமையில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். ஊழியர்களின் போராட்டத்தால், புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழக பேருந்துகள் சென்னை, புதுச்சேரி, சிதம்பரம் நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட பல வழித்தடங்களில் இயங்கவில்லை. இதனால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Puducherry Transport Corporation ,
× RELATED தினமும் நடுரோட்டில் பழுதாகி நிற்கும்...