×

அதிகாரிகள் அலட்சியம் காரைக்காலில் சூதாட்டம் போலீஸ்காரர் உள்பட 5 பேர் கைது

காரைக்கால், செப்.19: காரைக்காலில் சூதாட்டம் ஆடிய கடலோர காவல்நிலைய போலீசார் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.காரைக்கால் கடற்கரையோர பகுதியில், சூதாட்டம் நடைபெறுவதாக, மாவட்ட சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் வந்ததது. அதன்பேரில், மாவட்ட சிறப்பு அதிரடிப்பிரிவு இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, சப்.இன்ஸ்பெக்டர் பிரவீன்குமார், நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார், நேற்று குறிப்பிட்ட கடற்கரை பகுதிக்கு சென்றபோது, கடலோர காவல்நிலைய போலீசார் உள்ளிட்ட சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடுவது தெரியவந்தது.அதன்பேரில், சூதாட்டம் ஆடிய காரைக்கால் கடலோர காவல்நிலைய போலீசார் காந்தி(39), கிளிஞ்சல் மேட்டை சேர்ந்த சிவா(43), காரைக்கால் மேட்டைச்சேர்ந்த கலைமணி(37), அம்மன் கோவில்பத்தை சேர்ந்த பிரசாந்த்(38), பி.எஸ்.ஆர் நகரைச்சேர்ந்த சபியுல்லா(30), ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 பைக், 4 செல்போன்கள், ரூ.22 ஆயிரம் பணம் மற்றும் சீட்டுகட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : policeman ,Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...