பண்ருட்டி, செப். 19: பண்ருட்டி அருகே நத்தம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளையில் அரசு அனுமதியின்றி மணல் எடுக்கப்படுவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது 5 அடி ஆழத்திற்கு மேல் பெரிய பள்ளம் தோண்டப்பட்டு மணல் எடுக்கப்பட்டது தெரிந்தது.