திருக்கோவிலூர், செப். 19: திருக்கோவிலூர் அடுத்த சந்தப்பேட்டையில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தூய்மை பேரணி நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேச்சல்கலைச்செல்வி, செல்லதுரை ஆகியோர் துவக்கி வைத்தனர். தூய்மை பாரதம் இயக்கம் சார்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை தரம் பிரித்துடுவோம், கழிவு நீர் தேங்காமல் பார்த்து கொள்வது, பிளாஸ்டிக் பை உபயோகப்படுத்தவும் உள்ளிட்ட பதாகைகள் வைத்துகொண்டு கோஷங்கள் எழுப்பி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.