உளுந்தூர்பேட்டை, செப். 19: உளுந்தூர்பேட்டை அருகே எடைக்கல் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் அகிலன் மற்றும் போலீசார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது எறஞ்சி பெட்ரோல் பங்க் அருகில் வந்த ஒரு லாரியை மடக்கி சோதனை செய்ததில் அதில் அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கூழாங்கல் கடத்தி வந்த பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த ராஜசேகரன்(34) என்பரை கைது செய்னர்.