விழுப்புரம், செப். 19: தமிழக சட்டப்பேரவை குழு விரைவில் விழுப்புரம் வருகிறது. எனவே பொதுமக்க்அள் மனுக்கள் அளிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் 2018-2020ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் கூடுவதென முடிவு செய்துள்ளது. இதனையொட்டி விழுப்புரம் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தனிப்பட்ட நபரோ, சங்கங்களோ, அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை குழு தலைவருக்கு வரும் அக்டோபர் 18ம் தேதிக்குள் அனுப்பலாம்.
தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மாற்றம் மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல். வங்கிக்கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப்பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல். சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு விழுப்புரம் மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். இது குறித்து மனுதாரர்களுக்கு ஆட்சியர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 18ம் தேதிக்கு பின்னர் பெறப்படும் மனுக்கள் எடுத்துக்கொள்ளப்படாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.