வில்லியனூர், செப். 19: புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென காவல்துறை இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 16 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமை அலுவலக கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். இந்நிலையில் வில்லியனூர் வட்ட காவல் சரகத்துக்குட்பட்ட மங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சப்- இன்ஸ்பெக்டர் கதிரேசன் அதிரடியாக ஆயுதபடைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இத்தகவலை அறிந்த பொதுமக்கள் சப்- இன்ஸ்பெக்டர கதிரேசனை மாற்றக்கூடாது என்று பேனர் தயார் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த பேனர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.