×

போலி பஸ் பாஸ் விற்ற வாலிபர் கைது

தாம்பரம், செப். 19:  போலி பஸ் பாஸ் தயா
ரித்து, ₹60க்கு விற்பனை செய்த நெட் சென்டர் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.தாம்பரம், சானடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் டிக்கெட் பரிசோதகர்கள் வழக்கம்போல பரிசோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பெருங்களத்தூரில் இருந்து வந்த ஒரு பஸ்சில் இறங்கிய பள்ளி மாணவனிடம் டிக்கெட் கேட்டபோது, பஸ் பாஸ் உள்ளது என கூறி, அவர்களிடம் பாஸ்சை கொடுத்தான். அதை வாங்கி பார்த்தபோது, பாஸ் போலி என தெரிந்தது. இதையடுத்து, அந்த மாணவனிடம் விசாரித்தபோது, புதுபெருங்களத்தூரில் உள்ள ஒரு நெட்சென்டரில் போலி பஸ் பாஸ் தயாரித்து ₹60க்கு விற்பனை செய்வது தெரியவந்தது.இதுகுறித்து தாம்பரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, நெட் சென்டர் உரிமையாளர் கௌதம் (24) என்பவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...