×

மணிமங்கலம் மண் குவாரி சூபர்வைசரிடம் கத்திமுனையில் ₹2 லட்சம் கொள்ளை

பெரும்புதூர், செப்.19:  மணிமங்கலம் மண் குவாரியில், 3 பைக்குகளில் வந்த 9 பேர், அங்கிருந்த சூபர்வைசரிடம் கத்திமுனையில் ₹2 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். அவர்களை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை தாலுகா, மாவூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன்  (28). பெரும்புதூர் அருகே மணிமங்கலம் ஏரியில் இயங்கும் மண் குவாரியில் சூபர்வைசராக வேலை செய்கிறார்.நேற்று முன்தினம் மாலை லட்சுமணன், குவாரிக்கு வரும் லாரி டிரைவர்களிடம் பணம் வசூலித்து கொண்டிருந்தார். அப்போது 3 பைக்குகளில் வந்த 9 பேர், கத்தி, வீச்சரிவாள் போன்ற ஆயுதங்களை எடுத்து வந்து, லட்சுமணனை மிரட்டி அவர் வைத்திருந்த ₹2 லட்சத்தை கொள்ளையடித்தனர்.இதை பார்த்ததும், அங்கிருநத் சக ஊழியர்கள் கோபிநாத் (28), ரமேஷ் (27) ஆகியோர், மர்மநபர்களை தடுக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், 3 பேரையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.புகாரின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...