புதுச்சேரி, செப். 19: புதுவை பள்ளிக் கல்வித்துறையில் 9 விரிவுரையாளர்களுக்கு துணை முதல்வராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 4 மேல்நிலைப் பள்ளிகளின் முதல்வர்களும், 18 துணை முதல்வர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான ஆணையை பள்ளிக்கல்வி சார்பு செயலர் ஏழுமலை பிறப்பித்துள்ளார். ஏனாம் எஸ்டிபிபி பள்ளி முதல்வர் தினகர் நல்லமாலா குருசுகுப்பம் என்கேசி பள்ளிக்கும், அன்னை சிவகாமி அர்பிதா தாஸ் முத்தியால்பேட்டை சின்னாத்தா பள்ளிக்கும், காரைக்கால் தென்னூர் பள்ளி முதல்வர் கேசவ் இந்திரா நகர் பள்ளிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுதவிர பாகூர் பாரதி பள்ளியில் பணியாற்றிய எழில் கல்பனா அன்னை சிவகாமி பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விரிவுரையாளர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லித்தோப்பு மணிமேகலை பள்ளி வேதியியல் விரிவுரையாளர் சத்தியவதி, கிருமாம்பாக்கம் அம்பேத்கர் பள்ளிக்கும், இயற்பியல் விரிவுரையாளர் கதிர்வேல் நெட்டப்பாக்கம் கம்பன் பள்ளிக்கும், இளங்கோ அடிகள் பள்ளி உயிரியல் விரிவுரையாளர் பானுமதி திருவண்டார் கோயில் அரசு பள்ளிக்கும், இயற்பியில் விரிவுரையாளர் பூபதி பிஎஸ் பாளையம் பள்ளிக்கும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.