பெரும்புதூர், செப்.19: பெரும்புதூர் ஒன்றிய அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொது கூட்டம் சுங்குவார்சத்திரம் பஸ் நிலையம் அருகில் நடந்தது. எம்எல்ஏ பழனி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் ராமசந்திரன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் போந்தூர் செந்தில்ராஜன், ஒன்றிய செயலாளர் எறையூர் முனுசாமி, இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் சிவக்குமார், முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், பெரும்புதூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன், பெரும்புதூர் பேரூர் செயலாளர் குமார், ஒனறிய துணை செயலாளர் தயாளன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், நிர்வாகிகள் சார்லஸ், சிவசக்தி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.