×

வெல்டிங் தொழிலாளி பலி

குன்றத்தூர், செப். 19: சேலத்தை சேர்ந்தவர் சரவணன் (எ) மணி (27). குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வெல்டராக பணி புரிந்து வந்தார். கம்பெனியின் முதல் மாடியில், நேற்று வெல்டிங் பணியில் சரவணன் ஈடுபட்டார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.இதை பார்த்த சக ஊழியர்கள், அவரை மீட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சரவணன் இறந்தார்.
புகாரின்படி குன்றத்தூர் போலீசார், வழக்குப்பதிவு செய்து, சரவணன் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனர்.


Tags : Welding worker ,
× RELATED மாஞ்சா நூல் கழுத்தறுத்து வெல்டிங் ஊழியர் காயம்