புழல்: செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். இந்த பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின் மற்றும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், மாவட்ட செயலாளர் அலெக்சாண்டர் ஆகியோர் கலந்துகொண்ட நிகழ்ச்சிக்காக சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை முழுவதும் சாலையோரம் அதிமுகவினர் கொடி கம்பங்களை நட்டு வைத்தனர்.