முதுகு தண்டுவடம் உடைந்ததால் விரக்தி ஆண் உறுப்பை அறுத்து தொழிலாளி தற்கொலை

சென்னை:சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் நாகாத்தம்மன் கோயில் தெருவை ேசர்ந்தவர் அந்தோணிராஜ் (35). கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி பாத்திமா மற்றும் 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாத்திமா கே.ேக.நகர் அரசு மருத்துவமனையில் துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.கடந்த 2015ம் ஆண்டு அந்தோணிராஜ் மரம் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்ததில் முதுகு தண்டுவடம் உடைந்தது. சிகிச்சைக்கு பின்னரும் அவர் எழுந்து நிற்க முடியாமல் வீட்டில் படுத்த படுக்கையாகவே இருந்துள்ளார். இதனால் போதிய வருமானம் இல்லாமல் அந்தோணிராஜ் குடும்பம் வறுமையில் வாடியுள்ளது. தற்போது மனைவி பாத்திமா வருமானத்தில் தான் குழந்தைகள் படிப்பு மற்றும் குடும்பம் நடத்தி வருகின்றனர்.தனது குடும்பம் வறுமையால் வாடுவதை பார்த்து தன்னால் உதவ முடியவில்லையே என அந்தோணி ராஜ் மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியிடம், ‘முகம் ஷேவிங் செய்ய வேண்டும். பிளேடு வாங்கி வந்து கொடு’ என்று கேட்டுள்ளார். அதன்படி பாத்திமாவும் புதிய பிளேடு வாங்கி வந்து கொடுத்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் அந்தோணிராஜ் தனது ஆணுறுப்பை பிளேடால் அறுத்த எறிந்துள்ளார். இதில் வலி தாங்க முடியாமல் ரத்த வெள்ளத்தில் அலறி துடித்துள்ளார். சத்தம் ேகட்டு அவரது மனைவி பாத்திமா வந்து பார்த்து கணவன் உயிருக்கு போராடுவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிக ரத்தம் வெளியேறியதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.இதுகுறித்து எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் எம்ஜிஆர் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: