சென்னை: தத்துவவியல் துறை மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து 24ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு சென்னை பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த கிருபாமோகன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை பல்கலைகழகத்தில் உள்ள தத்துவவியல் துறையில் புத்திசம் படிப்பதற்காக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தேன். ஆவணங்கள் சரிபார்ப்புக்கு முடிந்து ஜூலை மாதம் 31 முதல் படிப்பை தொடர எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களாக படிப்பை தொடர்ந்து வரும் நிலையில், என்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. உரிய கல்விச்சான்றுகள் மற்றும் சேர்க்கை கட்டணம் செலுத்திய பின்னர், எந்தவித குற்றச்சாட்டுகளும் என் மீது இல்லாத நிலையில் காரணம் கூறாமல் என்னுடைய சேர்க்கை நிராகரிக்கப்பட்டுள்ளாதக துணை வேந்தர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார்.