×

குளத்தில் மழைநீர் சேமிப்பு பொறியாளர் தினவிழா

ராஜபாளையம், செப். 17: ராஜபாளையம் பி.ஏ.சி. ராமசாமி ராஜா பாலிடெக்னிக் கல்லூரியில் 52வது பொறியாளர் தினவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கல்லூரி மாணவர் அமைப்பினர் ஆலோசகர் கார்த்திகேயன் வரவேற்றார். முதல்வர் (பொ) சீனிவாசன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் உதவி பொதுமேலாளர் முருகன், வேலூர் விஐடி தொழில்நுட்பக் கல்லூரி இணைப்பேராசிரியர் நாகஜெயந்தி, நாமக்கல் மகேந்திரா பொறியியல் கல்லூரி துறைத்தலைவர் முத்துவிநாயகம் மற்றும் ராஜபாளையம் சிவில் இன்ஜினியர் சங்கத் தலைவர் பொறியாளர் சங்கரசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு, மாற்றத்திற்கான பொறியியல்’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர்.
மேலும், சுற்றுச்சூழல் மேம்பாடு, நீர் மேலாண்மை, தானியங்கி தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விளக்கம் அளித்தனர்
கல்லூரி பொறியாளர் அமைப்பு மாணவர்கள் தலைவர் செல்வன் லோகேஷ் குமார் நன்றி தெரிவித்தார். விழா ஏற்பாடுகளை பொறியாளர் அமைப்பு கொல்கத்தா மாணவர்கள், அமைப்பின் ஆலோசகர் கார்த்திகேயன் மற்றும் இந்திய தொழில் கல்விக்கழகம் புதுடெல்லி மாணவர் அமைப்பு ஆலோசகர் வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : engineer ,pond ,
× RELATED திருமங்கலத்தில் தேர்தல்...