×

மது விற்ற 4 பேர் கைது: 108 மதுபாட்டில்கள் பறிமுதல்

சாத்தூர், செப். 17: சாத்தூர் அருகே, மதுவிற்ற 4 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 108 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் அருகே, கோல்வார்பட்டியில் பெட்டிக்கடையில் மது விற்ற அதே ஊரைச் சேர்ந்த பெரியகருப்பசாமி என்பவரையும், திருவிருந்தான்பட்டியில் வீடு அருகே மது
விற்ற தங்கப்பாண்டி என்பவரையும், அப்பயநாயக்கன்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 90 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதேபோல, சாத்தூர் அண்ணாநகர் எடை நிலையம் அருகில் மது விற்ற சாத்தூரைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரை, சாத்தூர் டவுன் போலீசார்
கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஊமத்தம்பட்டி பஸ்நிறுத்தம் அருகே, மது விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சிங்கராஜ் என்பவரை, சாத்தூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED சிவகாசியில் வாறுகாலில் குப்பைகளை அகற்ற கோரிக்கை