×

முதலுதவி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவில்லிபுத்தூர், செப். 17: உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் அருகே, கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வீ-வைட்டமின் குளோபல் அமைப்பு, காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை சார்பில் என்எஸ்எஸ் மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை குறித்த விழிப்புணர்ச்சி நிகழ்ச்சி நடந்தது. இதில்,
வீ-வைட்டமின் குளோபல் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி ஜெஸ்ஸிலா ஏஞ்சலின், கிருஷ்ணன் கோவில் காவல் நிலைய எஸ்ஐ சத்தியராஜ், திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராஜ், என்எஸ்எஸ் ஒறுங்கிணைப்பாளர் கார்த்தீஸ்வரன் மற்றும் என்எஸ்எஸ் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முதலுதவி சிகிச்சை செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி