×

இ.சேவை மூலம் 15 வகை சான்றிதழ்

சிவகங்கை, செப். 17:  மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் வருமானம், சாதி, இருப்பிடச் சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களும், சமூகநலத் துறையின் மூலம் வழங்கப்படும் திருமண நிதிஉதவித் திட்டங்களும் மற்றும் இணையவழி பட்டா மாறுதல்களும் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இ.சேவை மூலம் 15 வருவாய்த்துறை சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. வாரிசு சான்று, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ், ஆண் குழந்தையின்மை என்பதற்கான சான்றிதழ், விதவை சான்றிதழ், திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ் உள்ளிட்ட 15 வகையான சான்றிதழ் இ.சேவை மையங்களில் வழங்கப்படும்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை