புழல், செப்.17: சோழவரம் ஒன்றியம் நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவராகவும் அதிமுக ஊராட்சி செயலாளராக இருந்தவர் கோட்டைச்சாமி (52). இவர், கடந்த 2016 ம் ஆண்டு செங்குன்றம் அடுத்த பம்மதுகுளம் புழல் ஏரி பகுதியில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் அடிபாதம், 12வது தெருவை சேர்ந்த விநாயகம் (45) என்பவரை செங்குன்றம் போலீசார் முக்கிய குற்றவாளியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வந்த விநாயகம், பல வழக்குகளில் மீண்டும் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் நல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர், அதிமுகவில் முக்கிய பிரமுகராக இருந்து வந்தார்.