சென்னை, செப். 17: “வெறி நாய்க்கடி இல்லா சென்னை” திட்டத்தின்கீழ் இதுவரை 30 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். “வெறிநாய்க்கடி இல்லா சென்னை” திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. துணை ஆணையர் (சுகாதாரம் ) மதுசுதன் ரெட்டி தலைமையில் மாநகர நல அலுவலர் ெசந்நில்நாதன் கண்காணிப்பில் மண்டலங்களில் மண்டல அலுவலர், மண்டல நல அலுவலர் மற்றும் கால்நடை உதவி மருத்துவர் ஆகியோரின் மேற்பார்வையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.