திருச்சி, செப்.17: திருச்சி எஸ்.பி.அலுவலகத்தில் ரிப்பேருக்கு வைத்திருந்த 11 வயர்லெஸ்களை திருடி விற்ற துப்புரவு தொழிலாளி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தின் கீழே தரைத்தளத்தில் ஒரு அறையில் போலீசார் பயன்படுத்தி பழுதான விஎச்எப் ஸ்டாடிக் செட் எனப்படும் வயர்லெஸ் மற்றும் வாக்கி டாக்கிகள் வைக்கப்பட்டுள்ளது. பழுதான இந்த வயர்லெஸ் மற்றும் வாக்கி டாக்கிகள் சென்னைக்கு அனுப்பி சர்வீஸ் செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். இதன்படி அந்த அறையில் பழுதான 44 ஸ்டாடிக் செட் பாக்ஸ்கள் சென்னைக்கு அனுப்புவதற்காக அட்டை பெட்டியில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் 11 வயர்லெஸ்களை காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் மாயமான வயர்லெஸ் பாக்ஸ் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது எஸ்பி அலுவலகத்தில் துப்புரவு பணி செய்து வரும் ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் என்பவருக்கு உடல்நிலை சரியில்லாததால் இவரது மகன் சீனிவாசன் (35) எஸ்பி அலுவலகத்தில் துப்புரவு பணி செய்து வருகிறார்.