×

மாணவர் மாயம்

சேலம், செப்.17:  சேலம் புத்துமாரியம்மன் கோயில் மார்டன் பில்டர்ஸ் காலனியை சேர்ந்தவர் சிவராமன்(45). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் சத்தியநாராணா(20), தனியார் பாலிடெக்னிக்கில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சரியாக செல்லாதது குறித்து கல்லூரி நிர்வாகம், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தது. இதுகுறித்து அவரது தாய் ராஜேஸ்வரி, மகனை கண்டித்தார். இதுகுறித்து, வெளிநாடு சென்று திரும்பிய சிவராமன், மகனை வாய்க்கால்பட்டறையில் உள்ள அவரது தந்தை சுந்தரேசன் வீட்டில் விட்டார். அங்கிருந்த சத்தியநாராயணா, கடந்த 7ம்தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து சிவராமன் கொடுத்த கொடுத்த புகாரின் ேபரில், வழக்கு பதிவு செய்த வீராணம் போலீசார், சத்தியநாராயணாவை தேடி வருகின்றனர். அவரது இடது கையில் ‘‘ஐ லவ் யூ மேம்’ என பச்சை குத்தியிருப்பார். இவரை பற்றி தெரிந்தவர்கள் தகவல்  கொடுக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags :
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை