கிருஷ்ணகிரி, செப்.17: காவேரிப்பட்டணம் எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரடிஹள்ளி பகுதியில் மாந்தோப்பில் 3 பேர் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த போலீசார், அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மலைப்பையூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்(30), கரடிஹள்ளியைச் சேர்ந்த சண்முகம்(31), ஜெகதாப்பைச் சேர்ந்த சின்னசாமி(27) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.