×

துப்புரவு பணியாளர் வாரிசுகளுக்கு பணி வழங்க கோரிக்கை

ஈரோடு, செப்.17:  கிராம பஞ்சாயத்து டேங்க் ஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் அம்மாபேட்டையில் ஒன்றிய பொதுக்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கி கோரிக்கைகளை விளக்கி பேசினார்.  கூட்டத்தில், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி நிதியில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும். மேலும், மாதம் 2 ஆயிரம் ரூபாய் பெற்று தர வேண்டும். கொமராயனூர் ஊராட்சியில் பணிக்காலத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வாரிசு அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியம் பெற்று தர வேண்டும். சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களுக்கு வீட்டு வாடகைப்படி, மருத்துவப்படி, சலவைப்படி வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு