×

குறைதீர் கூட்டத்தில் புகார் குண்டும், குழியுமான பூலான்குறிச்சி-மலையபட்டி சாலை

பொன்னமராவதி,செப்.17: பூலான்குறிச்சி-மலையபட்டி இடையே குண்டும் குழியுமான சாலையை சீர் செய்ய வேண்டும் என பொதுமக்க்ள கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் செவலூர் மலையடிப்பட்டியில் இருந்து காஞ்சாத்து மலை வழியாக பூலான்குறிச்சிக்கு தார் சாலை செல்கின்றது.

இந்த சாலை பல இடங்களில் குண்டும் குழியமாக வாகனங்கள் சென்று வர முடியாத சூழலில் உள்ளது. இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். இந்த சாலை வழியாக செவலூர் பூமிநாதர் கோயில் மற்றும் புதுக்கோட்டைக்கு செல்வோர் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டியநிலை உள்ளது. எனவே குண்டும் குழிமாக கிடக்கும் பூலான்குறிச்சி-மலையடிப்பட்டி சாலையை சீர் செய்யவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Poolangurichi-Malayapatti ,underdog meeting ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி