×

குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரம்பலூர்,செப்.17: பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டியை சேர்ந்தவர் கலையரசன். இவரது மனைவி கவினா(29). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். இதனிடையே நேற்று முன்தினம் மாலை மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனமுடைந்த கவினா வீட்டில் தூக்குமாட்டித் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற் குச் சென்று இறந்துபோன கவினாவின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனை க்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப் பிவைத்தனர்.
இது குறித்த புகாரின்பேரில் பெரம்ப லூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் வரதட்சணை காரணமாக கவினா தற்கொலை செய்துகொண்டாரா என ஆர்டிஓ சுப்பையா விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை