×

காரைக்கோவில்பத்து அரசு பள்ளியில் அறிவியல் தூய்மை இந்தியா ஓவியக்கண்காட்சி

காரைக்கால், செப்.17: காரைக்கோவில்பத்து தந்தைப் பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை, பள்ளி உதவி தலைமையாசிரியர் ராஜசேகரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். ஆண்டுதோறும் நடைபெறும் அறிவியல் கண்காட்சியுடன், தூய்மை இந்தியா குறித்தும், தூய்மைக்கு தங்களுடைய பங்களிப்பு குறித்தும் 7,8,9-ம் வகுப்பு மாணவர்கள் தங்களது கற்பனைத்திறனுக்கேற்ப, ஓவிய ஆசிரியர் காமராஜ் வழிகாட்டலின்படி ஓவியம் வரைந்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

மேலும், இன்குபேட்டர் கொண்டு செயற்கை முறையில் கோழிக்குஞ்சு உற்பத்தி, உடல் நலத்துக்கு தீங்கான பொருள்கள், வினிகர் மற்றும் இனோ உப்பு பயன்பாட்டின் தீமைகள் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. எராளமான மாணவர்கள், ஆசிரியர்கள் கண்காட்சியை கண்டுகளித்தனர். தொடர்ந்து, சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்து பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Indian Institute of Scientific Purity ,Karaikovil Government School ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...