தஞ்சை, செப். 17: தஞ்சையில் பைக் மோதிய விபத்தில் முதியவர் பலியானார். மதுரை மாவட்டம் இ.வி.குளம் மூவேந்தர் நகர் பூம்புகார் வீதியை சேர்ந்தவர் தங்கபிச்சை (70). இவர் தஞ்சையில் கல் பட்டறையில் கல்லுடைக்கும் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தங்கபிச்சை படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.