ஒரத்தநாடு, செப். 17: ஒரத்தநாடு, திருவோணம் வேளாண்துறை அலுவலகங்களில் ஆளும்கட்சி குழு அமைத்து மானிய தொகைகள் கொள்ளையடித்து வருவதாக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக காவிரி விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட துணை செயலாளரான இடையங்காடு வீரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, திருவோணம் அரசு வேளாண் உதவி இயக்குனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள வேளாண் கோட்டத்தில் மத்திய, மாநில அரசுகளால் விவசாயிகளுக்கு இடுபொருட்கள், விதைகள், உரங்கள், வேளாண் கருவிகள், மானியத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய விவசாயிகளுக்கான சலுகைகளை திருவோணம், ஒரத்தநாடு பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு நேரடியாக வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கப்படாமல் ஆளும்கட்சியை சேர்ந்த பல ஆண்டுகளுக்கு முன்பு குழுக்களாக அமைக்கப்பட்ட வேளாண் குழுவை கையில் வைத்து கொண்டு வேளாண் அதிகாரிகள் கொள்ளையடித்து வருகின்றனர். அரசின் சலுகைகளை விவசாயிகளுக்கு தெரியபடுத்துவதில்லை.