தஞ்சை, செப். 17: ஐந்தாம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாணவர் பெருமன்ற மாநிலக்குழு உறுப்பினர் சுதந்திரபாரதி தலைமை வகித்தார். கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பு என்பது கிராமப்புற பல்லாயிரக் கணக்கான ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கனவு பாதிக்கப்படும். எனவே கல்வி அமைச்சர் அறிவித்துள்ள பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்.