சங்கரன்கோவில், செப். 17: மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையிலான 8ம் ஆண்டு கைப்பந்து போட்டி நடந்தது. கல்லூரி செயலர் ரமாதேவி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காதரன் வரவேற்றார். பனவடலிசத்திரம் இன்ஸ்பெக்டர் ஷீஜா ராணி, போட்டிகளை துவக்கி வைத்தார். பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் டேனியல் இன்பராஜ், மாவட்ட கைப்பந்து கழக துணை தலைவர் புலியூரான், எஸ்ஜ ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் நன்றி கூறினார்.இதில் 20 அணிகள் கலந்து கொண்டுள்ளன. பல்வேறு சுற்றுகளாக போட்டிகள் நடக்கிறது. 18ம் தேதி இறுதிப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.