திசையன்விளை, செப். 17: இட்டமொழி பரிசுத்த யோசேப்பின் ஆலயத்தில் சுவிஷேச பண்டிகை நடந்தது. மீனாட்சிநாதபுரம் சேகர குரு பால் ஏசுதாசன் தலைமை வகித்து ஜெபம் செய்தார். கிறிஸ்தவர்கள் சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று சுவிஷேசம் அறிவித்தனர். தொடர்ந்து ஐக்கிய விருந்து நடந்தது.இதேபோல் சுவிஷேசபுரம் சேகரத்தில் நடைபெற்ற சுவிஷேச பண்டிகைக்கு சேகர குரு பாஸ்கர் கனகராஜ் தலைமை வகித்து ஜெபம் செய்தார். சேகரத்திற்கு உட்பட்ட அனைத்து சபை மக்களும் வாகனத்தில் சென்று பல்வேறு ஊர்களில் சுவிஷேசம் அறிவித்தனர். தொடர்ந்து வேலாயுதபுரம் சபையில் ஐக்கிய விருந்து நடந்தது.