×

களக்காட்டில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் அனுமதியின்றி கொடி கட்டியதாக திமுக நிர்வாகி மீது வழக்கு

களக்காடு, செப். 17: களக்காட்டில் திமுக உறுப்பினர் சேர்ப்பு முகாமிற்கு அனுமதியின்றி கட்சி கொடிகள் கட்டியதாகவும், பந்தல் அமைத்ததாகவும் திமுக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.களக்காட்டில் கடந்த 14ம் தேதி திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் கவி, மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், ஒன்றிய செயலாளர் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர், இதற்காக களக்காடு அம்பேத்கர் சிலை அருகில் இருந்து முகாம் நடந்த நினைத்ததை முடித்த விநாயகர் கோயில் தெருவில் உள்ள திடல் வரை திமுக கொடிகள் கட்டப்பட்டிருந்தது. அங்கு சாமியானா பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுமதியின்றி திமுக கொடிகள் கட்டியதாகவும், பந்தல் அமைத்ததாகவும் களக்காட்டை சேர்ந்த மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் ஜின்னா மீது களக்காடு இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : manager ,DMK ,
× RELATED கொடைக்கானலில் மலர் செடிகளை கொண்டு...