தூத்துக்குடி, செப். 17: தூத்துக்குடி நகர் கோட்டத்தில் மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் காரணமாக பெரும்பாலான பகுதிகளில் இன்று (17ம் தேதி) மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தூத்துக்குடி நகர மின்விநியோக செயற்பொறியாளர் விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்னூட்டம் செய்யப்படும் மின் தொடரில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் இன்று (17ம் தேதி) காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதன்படி மில் 1 பீடர் பகுதியில் போல்பேட்டை, ஸ்டேட்பாங்க் காலனி, எழில்நகர், அம்பேத்கர் நகர், இன்னாசியார்புரம், கந்தசாமிபுரம், அழகேசபுரம், நந்தகோபாலபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், திரவியபுரம், டிஎம்சி காலனி, டவுன் பீடரில் போல்பேட்டை கிழக்கு, எட்டையாபுரம் ரோடு, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, மேற்கு ரதவீதி, தெற்கு ரத வீதி, பத்திரகாளியம்மன் கோவில் தெரு, ரஹமத்துல்லாபுரம், டபுள்யு.ஜி.சி. ரோடு, பெருமாள் கோவில் தெரு, தெப்பக்குளம் தெரு, ஜார்ஜ் ரோடு, சிவந்தாகுளம் ரோடு உள்ளிட்ட பகுதிகள். இதே போல் பாத்திமா நகர், இந்திராநகர், தாமஸ்நகர், புல்தோட்டம், தாமோதரநகர், சண்முகபுரம் பிராப்பர், வண்ணார் தெரு, தந்தி ஆபீஸ் ரோடு, சந்தை ரோடு, தெற்குகாட்டன்ரோடு, அந்தோணியார்புரம் கோவில் தெரு, லயன்ஸ் டவுன், ரோச் காலனி, பனிமய நகர், ஸ்னோஸ் காலனி, சாந்திநகர், மறக்குடி தெரு, ஜெயலானி தெரு, தெற்கு புதுத்தெரு, வி.இ.ரோடு, சிவன்கோவில் தெரு, செல்விஜர் தெரு உள்ளிட்ட பகுதிகள்.