×

நகை வியாபாரி காரை தீ வைத்து எரித்தவர் கைது

தூத்துக்குடி, செப்.17:  தூத்துக்குடி பிரையண்ட் நகரை சேர்ந்தவர் பாலசுந்தர கணேஷ் (50). நகை கடை உரிமையாளரான. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது காரை அங்குள்ள தனது உறவினர்  வீட்டு முன்பு நிறுத்தியிருந்தார்.    அப்போது அங்கு வந்த வள்ளிநாயகபுரத்தை சேர்ந்த பெயிண்டர் சக்திவேல் (23), என்பவர் கார் நிறுத்தப்பட்டிருப்பது குறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் இரவில் கார் தீவைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த தூத்துக்குடி தென்பாகம் எஸ்ஐ ராஜாமணி, சக்திவேலை கைதுசெய்தார்.

Tags : jewelery dealer ,
× RELATED டெல்லி சிறப்பு அதிகாரி என்று கூறி...