பூதப்பாண்டி, செப். 17: கீரிப்பாறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து சாத்தான்குளம் முதியவர் பரிதாபமாக இறந்தார். மேலும் இந்த விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் காயமடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த நொச்சிகுளத்தைச் சேர்ந்தவர் எபிராகிம் (50). இவரது தலைமையில் 5 ஆண்கள், 13 பெண்கள், 4 குழந்தைகள் உள்ளிட்ட மொத்தம் 22 பேர் நேற்று முன்தினம் குமரி மாவட்டத்துக்கு வேனில் சுற்றுலா வந்தனர். வேனை அந்தோணி செபஸ்தியான் ஓட்டினார். இவர்கள் கீரிப்பாறை அருகேயுள்ள காளிகேசம் பகுதிக்கு செல்லத் திட்டமிட்டிருந்தனர். தற்போது மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் காளிகேசத்துக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி அளிக்கவில்ைல. இதையடுத்து கீரிப்பாறை அருகே பால்குளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட் பகுதியில் தண்ணீர் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு குளிக்க சென்றனர். மாலை அப்பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பிவந்தபோது எதிர்பாராதவிதமாக பிரேக் பிடிக்காததால் பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது.