நெல்லை, செப். 15: நெல்லை டவுனில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் துவக்கிவைத்தார். திமுக இளைஞரணிக்கு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நெல்லை டவுன் காந்தி சிலை முன்பாக நடந்த இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ தலைமையில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் துவக்கிவைத்தார்.