மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லையில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெல்லை, செப். 15: நெல்லை டவுனில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் துவக்கிவைத்தார். திமுக இளைஞரணிக்கு ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்க இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் நெல்லை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. நெல்லை டவுன் காந்தி சிலை முன்பாக நடந்த இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை முகாமை ஏஎல்எஸ் லட்சுமணன் எம்எல்ஏ தலைமையில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் அப்துல் வஹாப் துவக்கிவைத்தார்.

 இதில் இளைஞர் அணி மத்திய மாவட்ட அமைப்பாளர் வில்சன் மணித்துரை, துணைச் செயலாளர் பிஎம் சரவணன், விவசாயத் தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் தாழை கே.ஆர்.ராஜூ, நெல்லை டவுன் பகுதி செயலாளர் நமச்சிவாயம், இளைஞர் அணி  மாநகர அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், முன்னாள் பகுதி செயலாளர் உலகநாதன், எல்ஐசி பேச்சிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: