நெல்லை, செப். 15: நெல்லையில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 959 வழக்குகளில் ரூ.6.51 கோடி தீர்வு வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் 3வது தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது தலைமையில் நடந்தது. மக்கள் நீதிமன்ற நீதிபதி சுபாதேவி, கூடுதல் மாவட்ட நீதிபதிகள் அருள்முருகன், விஜயகாந்த், சந்திரா, இந்திராணி, தலைமை குற்றவியல் நீதிபதி ரவிக்குமார், சட்ட உதவி மைய நீதிபதி வஷித்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் 9 அமர்வுகளும், தாலுகா நீதிமன்றங்களில் 16 அமர்வுகளும் என மொத்தம் 25 அமர்வுகளில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.