×

நீடாமங்கலத்தில் வடிகால் தூர்வாரும் போது குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

நீடாமங்கலம்,செப்.15: நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் வடிகால் தூர் வாரும் போது வேதாரண்யம் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் விரயமாகிறது. வேதாரண்யம் கூட்டு குடிநீர் கொள்ளிடத்திலிருந்து சுத்திகரித்து பம்பு செய்து பாபநாசம்,வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக சாலைகளில் மையப்பகுதிகளிலும்,தரை தள நீர் தேக்க தொட்டி அமைத்து தண்ணீர் வேகத்தை அதிகப்படுத்தப்படுகிறது.சாலை ஓரங்களிலும் குழி தோண்டி சிமென்ட் குழாய்கள் அமைத்து வேதாரண்யம் மற்றும் வழியோர கிராமங்களுக்கு குடி நீர் வழங்கப் படுகிறது.

குடிநீர் செல்ல சாலைகளில் சிமென்ட் குழாய்கள் அமைத்து தண்ணீர் செல்வதால் கனரக வாகனங்கள் செல்வதாலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்படும் தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அண்ணாசிலை அருகில் வடபுறம் ஒரத்தூர் வடிகால் வாய்க்கால் அருகில் சிமென்ட் குழாய்கள் மூலம் கொண்டு செல்லும் குடிநீர் குழாய் அந்த வடிகால் கடந்த 4 நாட்களுக்கு முன் தூர்வாரும் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் விரயமாக செல்கிறது.எனவே சம்மந்தப்பட்டு துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு 4 நாட்களாக விரயமாகும் குடி நீரை கட்டு படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Needamangalam ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி