×

திமுக இளைஞரணி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி துவக்கம்

திருவாரூர், செப். 15: திருவாரூர் மாவட்டத்தில் திமுக இளைஞர் அணியில் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியினை நேற்று மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார். திமுக இளைஞரணி மாநில செயலாளராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இளைஞர் அணிக்கு மாநிலம் முழுவதும் 30 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்றும் இதற்கான முகாம் செப்டம்பர் 14ம் தேதி (நேற்று) துவங்குவதாக அறிவித்திருந்தார் .

அதன்படி மாநிலம் முழுவதும் இந்த பணியானது நேற்று துவங்கிய நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி மற்றும் நன்னிலம் ஆகிய 4 எம்.எல்.ஏ தொகுதிகளிலும் தலா 10 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் வீதம் 40 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு மாவட்ட இளைஞரணி சார்பில் முடிவு செய்யப்பட்டு இதற்கான துவக்க பணி திருவாரூரில் கட்சியின் நகர அலுவலகத்தில் இளைஞரணி மாவட்ட துணை செயலாளர் பைந்தமிழ் பாரி தலைமையில் நடைபெற்றது. இதில் உறுப்பினர் சேர்க்கும் பணியினை கட்சியின் மாவட்ட செயலாளரும் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் துவக்கி வைத்தார் .

இதில் இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா,துணை அமைப்பாளர்கள் ரஜினி சின்னா, ராதாகிருஷ்ணன் மற்றும் கட்சியின் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள்,சார்பு அணி பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED தமிழகத்திற்கு பிரதமர் அடிக்கடி...