×

கோட்டைப்பட்டினம் நெல்லிக்குளத்தை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

மணமேல்குடி, செப்.15: மணமேல்குடி அடுத்த கோட்டைப்பட்டினத்தில் உள்ள நெல்லிக்குளத்தை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மையபகுதியில் அமைந்துள்ளது நெல்லிக்குளம். இக்குளம் அப்பகுதியில் முக்கிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. இக்குளம் சுமார் 1000 குடும்பங்களுக்கு பயன்பெறும் வகையிலும் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக போதிய மழை இல்லாததால் இக்குளம் வரண்டு காணப்பட்டது.

 பின்னர் அவ்வபோது கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்ததால் அக்குளத்தில் தண்ணீர் தேங்கி குளம் முழுவதும் கோரை புல் வளர்ந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலைக்கு வந்துள்ளது மற்றும் அளவுக்கு அதிகமாக கோரை வளர்ந்துள்ளதால் சில சமயங்களில் ஆடு மாடுகள் அதனுல் சிக்கி உயிரிழக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளம் முழுவதும் புதர்போல் மண்டியுள்ள கோரை புல்லை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா