×

திருக்குவளையில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல் முகாம்

கீழ்வேளூர், செப்.15: நாகை மாவட்டம் திருக்குவளையில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் இல்லத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கவுதமன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மேகநாதன், கோவிந்தராசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மலர்வண்ணன், துணை அமைப்பாளர்கள் விஜயேந்திரன், முத்துக்கிருஷ்ணன், அசோக், கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழையூர் ஒன்றிய செயலாளர் தாமஸ்ஆல்வாஎடிசன் வரவேற்றார்.

முகாமை மாநில இளைஞரணி துணை செயலாளர் பைந்தமிழ்பாரி தொடங்கி வைத்தார். அப்போது நாகை, கீழ்வேளூர், வேதாரண்யம் சட்ட மன்ற தொகுதியை சேர்ந்த 35 வயதிற்கு உட்பட்ட ஏராளமான இளைஞர்கள் தங்களை இளைஞர் உறுப்பினராக பதிவு செய்து கொண்டனர். நிக்ழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் மனோகரன், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் காமராஜ, ஒன்றிய செயலாளர்கள் சரவணன், மகாகுமார், நகர செயலாளர்கள் போலீஸ்பன்னீர், செந்தில்குமார், வேளாங்கண்ணி பேருர் பொறுப்பாளர் மரியசார்லஸ், பொது குழு உறுப்பினர் சார்லஸ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை திமுக அலுவலகத்தில் மாவட்ட திமுக இளைஞர் அணிக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. நாகை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நிவேதாமுருகன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் குத்தாலம் கல்யாணம், நகர கழக செயலாளர் குண்டாமணிசெல்வராஜ், மாவட்ட திமுக இளைஞரணி தலைவர் அலெக்சாண்டர், துணைத் தலைவர் சிவதாஸ் மற்றும் இளைஞரணி பொறுப்பாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஏராளமானோர் உறுப்பினராக இணைந்தனர்.

Tags : DMK ,youth member enrollment camp ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி