×

வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் தொழிலாளி கொலையில் மேலும் ஒருவர் கைது

வேதாரண்யம், செப்.15: வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் கூலித்தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். வேதாரண்யம் அருகே உள்ள அகஸ்தியன்பள்ளி கிராமத்தை சோந்தவர் சோமு மகன் ரவி (48). அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் செந்தில் (45) உப்பள கூலித் தொழிலாளர்களான இருவரும் உறவினர்கள். முன்விரோதத்தால் ரவி தனது குடும்பத்துடன் கோடியக்காடு பகுதியில் வசித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 10ம்தேதி செந்தில் அவரது தாய் செல்வி மற்றும் உறவினர் சாந்தா ஆகியோர் ஒரு பைக்கில் கோடியக்காட்டுக்கு ஆயுதங்கள் மற்றும் மிளகாய் பொடியுடன் சென்றனர். அங்கு வீட்டிருந்த ரவி, அவரது மனைவி நாகலட்சுமி, மகன் கோகுலசந்திரன் ஆகியோர் மீது மிளகாய் பொடியை தூவி ஆயுதங்களால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த ரவி, செந்தில் குடும்பத்தினரை அரிவாளால் வெட்டினார்.

இதில் வெட்டுப்பட்ட செந்தில் சம்பவ இடத்தில் இறந்தார். தகவல் அறிந்த வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா சம்பவ இடத்துக்கு சென்று செந்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், படுகாயமடைந்தவர்களையும் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வேதாரண்யம் சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து ரவி மற்றும் தமிழ்செல்வன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய கோடியக்காட்டை சேர்ந்த கோவிந்தராசு மகன் விக்னேஷ் (24) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags : worker murder ,Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்