கிழக்கு மாவட்டத்தில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வாழப்பாடி. செப்.15: சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ₹500 வீதம் செலுத்தி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், வாழப்பாடி நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.செந்தில் முருகமணி, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் பாலாஜி, உமாபதி, செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கெங்கவல்லி: கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமினை கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா விண்ணப்பங்களை வழங்கி துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை, மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் துரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், ஒன்றிய செயலாளர் அகிலன், மணி, பேரூர் செயலாளர் ஷேக் மொய்தீன், சண்முகம், அழகுவேல், வேல், கெங்கவல்லி இளைஞரணி பாலமுருகன், மணிவண்ணன், தர்வேஷ், காசி, ஊராட்சி செயலாளர் பொன்.தங்கராஜ், ராமச்சந்திரன், செல்வம், பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Related Stories: