வாழப்பாடி. செப்.15: சேலம் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாழப்பாடியில் திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் துவக்க விழா நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். இதில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ₹500 வீதம் செலுத்தி உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சந்திரமோகன், வாழப்பாடி நகர செயலாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய பொறுப்பாளர் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்.செந்தில் முருகமணி, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் பாலாஜி, உமாபதி, செந்தில்குமார், இளைஞரணி அமைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.