×

திமுக இளைஞரணிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம்

பரமத்திவேலூர், செப்.15: நாமக்கல் மேற்கு மாவட்டத்தில், திமுக இளைஞரணி தீவிர உறுப்பினர் சேர்க்கை முகாம், பரமத்தியில் நேற்று தொடங்கியது. பரமத்திவேலூர் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுந்தரம், வர்த்தகரணி அமைப்பாளர் கிரிசங்கர் முன்னிலை வகித்தனர். முகாமில், பரமத்தி பேரூர் செயலாளர் ரமேஷ்பாபு, இளைஞரணி அமைப்பாளர் காமராஜ், நகர துணை செயலாளர் முருகேசன், தேவா செங்கோட்டுவேலு, மணி, நாச்சிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு, புதிய உறுப்பினர்களை சேர்த்தனர். அப்போது பரமத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், திமுக இளைஞரணியில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.

இதேபோல், பரமத்திவேலூர் அடுத்துள்ள கூடச்சேரி, ஒழுகூர்பட்டி, பரமத்திவேலூர், பொத்தனூர் பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாம்களை கே.எஸ்.மூர்த்தி எம்எல்ஏ தொடங்கி வைத்து பேசினார். அப்போது ஒவ்வொரு பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து பகுதிகளிலும் அதிகப்படியான இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில் உள்ள பல வார்டுகளில், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதுரா செந்தில், மாவட்ட பொருளாளர் குமார், வர்த்தக அணி அமைப்பாளர் கிரிசங்கர், திருச்செங்கோடு நகர செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் சுந்தர், செல்வம், பாலாஜி, சரவணன், சுரேஷ்குமார் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் ஒன்றியத்தில், உறுப்பினர் சேர்க்கையை ஒன்றிய செயலாளர் தங்கவேல் துவக்கி வைத்தார்.

Tags : Camp ,DMK Youth ,
× RELATED பாஜக அரசு கட்டிக்கொடுத்த இலவச வீடுகள்...