×

கள்ளத்தொடர்பு தகராறில் தந்தையை தாக்கிய மகன் உட்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி, செப்.15: கள்ளத்தொடர்பு தகராறில் தந்தையை தாக்கிய மகன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி குருபரப்பள்ளி அருகே நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன்(69). டிராக்டர் டிரைவர். இவரது மகன் சந்தோஷ்(20). அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் மகன் அரவிந்தகுமார்(19). சந்தோஷூம், அரவிந்தகுமாரும் நண்பர்கள். இந்நிலையில், அரவிந்தகுமாரின் தாய் ஞானதேவிக்கும், ஜெயராமனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த சந்தோஷ், கள்ள உறவை பற்றி தந்தை ஜெயராமனிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

அவருடன் அரவிந்தகுமார், முனிரத்தினம் ஆகியோரும் சேர்ந்து ஜெயராமனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் அங்கு கிடந்த இரும்பு கம்பியை எடுத்து ஜெயராமனை சந்தோஷ் உள்ளிட்டோர் பலமாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஜெயராமன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, தந்தையை தாக்கிய மகன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பிரசாரம்