×

வாலிபரிடம் கத்தியை காட்டி பணம், செல்போன் பறிப்பு

கிருஷ்ணகிரி, செப்.15: கிருஷ்ணகிரி அடுத்த பாகலூர் அருகே இலுவபள்ளி பகுதியை சேர்ந்த குர்ரப்பா மகன் மாதேஷ்(39). இவர், பேரிகை ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு டூவீலரில் வந்த, சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் நரேஷ்குமார்(19) என்பவர், மாதேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ₹500, செல்போனை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து மாதேஷ் பாகலூர் போலீசில் புகாரளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Tags : plaintiff ,
× RELATED திருமணமான 4 மாதங்களில் 2வது திருமணம் செய்ய முயன்ற வாலிபர் கைது