×

எலிபேஸ்ட் சாப்பிட்ட பெண் சாவு

விருத்தாசலம், செப். 15: விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகா உ.கீரனூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுரங்கம் மகள் தாணியா (32). இவருக்கும், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே உள்ள ரூபநாராயணநல்லூரை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. குழந்தை இல்லை. இதனால் தாணியா மன வேதனையில் இருந்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 6ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தாணியா எலிபேஸ்ட் மருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் இறந்தார்.  இதுகுறித்து தாணியாவின் தாய் அஞ்சலை கொடுத்த புகாரின் பேரில் மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED வாய்க்காலில் சடலமாக கிடந்த ஆண் சிசு