×

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்கலாம் கலெக்டர் அறிவிப்பு

நாகர்கோவில், செப்.15: கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  தேர்தல் ஆணைய அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த 1ம் தேதி தொடங்கி வருகிற 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, கடவுச் சீட்டு, ஆதார், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், உழவர் அடையாள அட்டை,  வருமான வரி கணக்கு எண்,  ஸ்மார்ட் கார்டு அல்லது விண்ணப்பதாரின் நெருங்கிய உறவினரின் தொலைபேசி, குடிநீர், எரிவாயு இணைப்பு ரசீது இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல்  அளித்து, தங்களின் பதிவு விபரங்களை உறுதி செய்து கொள்ளலாம்.

இந்த திருத்த பணியின் போது, இடம்மாறி சென்றவர்கள்,  இறந்தவர்கள் விபரம் சரிபார்க்கப்படும். வாக்களார் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்துதல் போன்றவற்றுக்கு உரிய படிவத்தினை  வாக்குசாவடி நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்கலாம். வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்வார்கள். எனவே வாக்காளர்கள் அவர்களது பெயர்கள் மற்றும் அவர்களது உறவினர்களின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து ெகாள்ள வேண்டும். ஏற்கனவே பெயர் இருந்தாலும், மீண்டும் ஒரு முறை சரிபார்க்க வேண்டும். மேலும் NVSP என்ற இணையதளத்தை பயன்படுத்தியும், வாக்காளர் பதிவு விபரங்களை சரிபார்த்து அதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்  . இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்